கந்தானையில் தீ விபத்து – ஒருவர் பலி!

33

கந்தானை பிரதேசத்தில் இரசாயன உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான களஞ்சியசாலையில் இன்று (08) காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்தின் போது, ​​நிறுவனத்தின் கணக்காளர் களஞ்சியசாலைக்குள் இருந்ததால், அவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கந்தானை வீதி மாவத்தை பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா மற்றும் நீர்கொழும்பு தீயணைப்பு பிரிவினரும், கடற்படையின் தீயணைப்பு பிரிவினரும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here